செப்பாங் , டிச 1 – இன்று முதல் விசா தளர்வு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு துறை 14 முகப்பிட சேவைகளை அதிகரிக்கும். கே.எல் ஐ.ஏ 1 மற்றும் இரண்டில் 78 முகப்பிடங்கள் இருப்பதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். வெளிநாட்டு வருகையாளர்களை சுமுகமாக சமாளிப்பதற்கு கூடுதலான 14 முகப்பிடங்கள் உறுதிப்படுத்தும் என அவர் கூறினார். அதே வேளையில் திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டல் வசதி குறித்தும் வருகையாளர்கள் குடிநுழைவுத்துறையிடம் உறுதிப்படுத்த வேண்டும் என ருஸ்லின் ஜூசோ கேட்டுக்கொண்டார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
13 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
13 hours ago