Latestஉலகம்

கே- டிராமா சீரிஸ்களை பார்த்த இரு வடகொரிய இளைஞர்களுக்கு; கடுமையான உடல் உழைப்பு தண்டனை

பியோங்யாங், பிப்ரவரி 2 – தென் கொரியாவின் கே-டிராமா நாடகங்களை பார்த்ததால், 16 வயதான இரு வட கொரிய இளைஞர்களுக்கு, 12 ஆண்டுகள் உடல் உழைப்பு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

அவ்விரு இளைஞர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்ட காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

கே-டிராமா நாடகங்கள் சீரழிவுக்கு வித்திடுகிறது என கூறி, அவற்றுக்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்று வட கொரியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்த நாடகங்களை பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை தொடங்கி மரண தண்டனை வரை விதிக்க அந்த சட்டம் வகை செய்கிறது.

இதற்கு முன், கே-மியூசிக் இசையை கேட்ட வட கொரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!