Latestமலேசியா

கோத்தா கினாபாலுவில் கொள்ளையிடச் சென்ற முன்னாள் கைதிகள் கைது

கோத்தா கினாபாலு, மார்ச்-4, சபாவில் வீடு புகுந்துக் கொள்ளையிட போன போது இரு முன்னாள் கைதிகள் போலீசிடம் சிக்கினர்.

இருவரும், கோத்தா கினாபாலு மற்றும் சண்டாக்கானில் வீடுகள், கடைகள் மற்றும் கார் பட்டறைகளை உடைத்துக் கொள்ளையிட்டு வந்தவர்கள் ஆவர்.

முறையே 25, 32 வயதுடைய அவ்விருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு எண்ணெய் நிலையமொன்றில் பிடிபட்டதாக, சபா குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் அஸ்மி அப்துல் ரஹிம் கூறினார்.

வீட்டை உடைக்க அவர்கள் பயன்படுத்திய பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் துருவி விசாரித்ததில், மளிகைக் கடைகளை உடைத்துக் கொள்ளையிட்டிருப்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் அவர்கள் சிக்கியிருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

அவர்களின் பின்னால் கும்பலேதும் இருக்கின்றதா என்பதையும் விசாரித்து வரும் போலீஸ், குற்றவியல் சட்டத்தின் 457-வது பிரிவின் கீழ் அச்சம்பவத்தைப் பதிவுச் செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!