Latestமலேசியா

கோலாலம்பூரில், சாலை சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் ; உரிமையாளருக்கு எச்சரிக்கை குறிப்பையும் விட்டுச் சென்ற சம்பவம் வைரல்

கோலாலம்பூர், ஜுலை 12 – தலைநகரிலுள்ள, PPR மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவரின், கார் பக்கவாட்டு கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டதோடு, அவருக்கு எச்சரிக்கை குறிப்பையும் விட்டுச் சென்ற மர்ம நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவத்தை பாதிக்கப்பட்டவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதை அடுத்து அது வைரலாகி கலவையான கருத்துகளை பெற்று வருகிறது.

இரவு மணி பத்து வாக்கில், காரை நிறுத்த இடம் இல்லாததால், மூன்று முச்சந்தி சாலை சந்திப்பில் அந்நபர் தனது புரோடுவா கன்சில் காரை பார்க் செய்துள்ளார்.

அதோடு, அக்காரை எளிதாக நகர்த்த ஏதுவாக, கை பிரேக்கையும் அவர் தளர்த்தி விட்டு சென்றதாக பதிவிட்டுள்ளார்.

எனினும், காலையில் வேலைக்கு செல்ல வந்த போது, அவரது கார் பக்கவாட்டு கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அதோடு, கார் மீது அக்கறை இருந்தால் இனி இங்கு பார்க் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை குறிப்பு ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில், அது ஒரு சதிநாச செயல் எனவும், போலீஸ் புகார் செய்யுமாறு, நெட்டிசன்கள் கருத்துரைத்துள்ள வேளை ;

“அதிகமான வாகனங்களை வைத்திருந்தால் இப்படி தான் நிகழும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்” என சிலர் சினத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!