Latestமலேசியா

கோலா குபு பாரு இடைத் தேர்தல் 640 போலீஸ்காரர்கள் நிறுத்தி வைக்கப்படுவர்

ஷா அலாம், ஏப் 24 – கோலா குபு பாரு  இடைத்தேர்தலை முன்னிட்டு   மொத்தம் 640   போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள்  பாதுகாப்பு  பணியில் ஈடுபடுவர் என  சிலாங்கூர்  போலீஸ்  துணைத் தலைவர் Datuk S. Sasikala Devi   தெரிவித்தார்.   ஏப்ரல்  27ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல்  நடைபெறும் நாள் தொடங்கி மே 11ஆம்தேதி  இடைத்தேர்தலுக்கான  வாக்களிப்பு நடைபெறும்வரை    பாதுகாப்பு,  மற்றும்  போக்குவரத்து  நெரிசலை  கட்டுப்படுத்துவது உட்பட பலேவேறு  பாதுகாப்பு பணிகளில்  கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில்  போலீஸ் அதிகாரிகளும்  போலீஸ்காரர்களும்   பணியில் ஈடுபாடுவர்கள் என   இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்  தெரிவித்தார். 

பிரச்சாரக் காலத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத அம்சங்கள் குறித்து  விரைவில்    அரசியல் கட்சியின்   பிரதிநிதிகளை  உலுசிலாங்கூர்    OCPD   சந்திப்பார் என     சசிகலா  கூறினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது  3 R எனப்படும்    இனம், சமயம் மற்றும் அரச அமைப்பு தொடர்பான விவகாரங்களை   அரசியல் கட்சிகள்  சர்ச்சையாக்கக்கூடாது என  அவர்   கேட்டுக்கொண்டார்.  மே 7 ஆம் தேதி நடைபெறும்  முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கையில்    625 போலீஸ் அதிகாரிகள்   மற்றும்  238  ராணுவ அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்றும்  அவர்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!