Latestமலேசியா

கோல சிலாங்கூரில் விழுந்து விபத்துக்குளான ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 6 – நேற்று கோல சிலாங்கூரில் அங்சா தீவின் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள், இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மீட்புப் பயிற்சியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கும் போது நேற்று காலை 9:55 மணியளவில் விபத்து நடந்தது.

இந்நிலையில், கடல்சார் போலீஸ் பிரிவுக்குச் சொந்தமான அந்த AW 139 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நால்வரும் மீனர்வர்களால் காப்பாற்றப்பட்டனர்.

அதனை தொடந்து, அந்த ஹெலிகாப்படரின் உடைந்தப் பாகங்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், இன்று காலை 2 மணியளவில் அது நிறைவடைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!