Latestமலேசியா

சபாவில், மனைவியின் முகத்தில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது; பொறாமையால் நேர்ந்த விபரீதம்

பியூபோர்ட், பிப்ரவரி 12 – மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரது முகத்தில் குத்தி காயப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் 35 வயது ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

இம்மாதம் பத்தாம் தேதி, காலை மணி பத்து வாக்கில், சபா, பியூபோர்ட், கம்போங் சியானிலுள்ள, வீடொன்றின் முன்புறம், காரில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஆத்திரமடைந்த அவ்வாடவன், மனைவியின் முகத்தில் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதனால் வலது கன்னத்திலும், புருவத்திற்கு கீழும் காயங்களுக்கு இலக்கான அந்த 34 வயது பெண் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட ஆடவன், இன்று தொடங்கி நான்கு நாட்கள், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!