Latestமலேசியா

சய்ன் ரய்யன் மரணம் தொடர்பில் விசாரணை நிறுத்தப்படாது

கோலாலம்பூர், ஜன 2- ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சய்ன் ரய்யன் அப்துல் மதின் கொலை தொடர்பில் புதிய தடயங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அது குறித்த விசாரணை நிறுத்தப்படாது என்பதோடு விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் உறுதிப்படுத்தினார். இதுவரை புதிய தடயங்கள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும் மேல் நடவடிக்கை இல்லை என்று இந்த விவகாரம் வகைப்படுத்தப்படாது. சய்ன் ரய்யன் படுகொலைக்கு தீர்வு காண்பதற்கான வழி கண்டறியும்வரை விசாரணை தொடரும் என ஹுசைன் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் 5ஆம்தேதி சய்ன் ரய்யன் டமன்சரா டமாயில் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மறுநாள் சய்ன் ரய்யன் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நீரோடையில் இறந்த நிலையில் அவனது உடல் மீட்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!