Latestமலேசியா

சரவாக்கில் நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவரை முதலைத் தாக்கியது

ஸ்ரீ அமான், மே-13, சரவாக் ஸ்ரீ அமானில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவரை முதலை அடித்துத் கொன்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Sungai Semaruang Bangkong ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இதர 3 நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 32 வயது அந்நபர் முதலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பவ இடம், பாதிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 40 நிமிட பயணத்தைக் கொண்ட தூரத்தில் அமைந்துள்ளது.

தீயணைப்பு மீட்புத் துறைக்கு இரவு 7.30 மணி வாக்கில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று இருட்டாகி விட்டதால் இன்று காலை 8 மணி தொடங்கியே அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்ன நடந்தது என்பது குறித்து உடன் இருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!