Latestமலேசியா

சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14, 200 ஆக உயரந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 11,100 ஆக இருந்தது. மருத்துவமனையில் தினசரி அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சராசரி 102 லிருந்து 133 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது. தற்போதைய மருத்துவமனை திறன், தொற்று அதிகரிப்பை சமாளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது என சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் தான் தொற்று அதிகரிப்பதாக அதிகாரிகள் விளக்கினர். தற்போது புழக்கத்தில் உள்ள இரண்டு முக்கிய தொற்று வகைகளாக LF.7 மற்றும் NB.1.8 இருக்கின்றன.

அவையிரண்டும் JN.1 வகையைச் சேர்ந்தவை. இருப்பினும், இந்த வகைகள் அதிக தொற்று கொண்டவை அல்லது அதிக கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது COVID-19 அலைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பில் முதியவர்கள், உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்கள் புதுப்பித்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!