![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-14-May-2024-05-52-PM-5685.jpg)
சிங்கப்பூர், மே 15 – சிங்கப்பூரில், 480 டாலருக்கும் கூடுதல் மதிப்புடைய, இரு போகெமோன் கார்ட்டு பெட்டிகளை திருடிய, மலேசிய தாதி ஒருவரை, ஓராண்டு கண்காணிப்பில் வைக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 வயது போங் ஜியா வெய் எனும் அந்த ஆண் தாதி, தமக்கு எதிரான இரு திருட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்த தீர்ப்பளித்தது.
சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை பெற்றவரான அவர், அன்றாடம் இரவு மணி 11 முதல் அதிகாலை மணி ஆறு வரையில் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதோடு, அவர் 40 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொந்த கடனை அடைப்பதற்காக, அவர் அந்த போக்கேமோன் கார்ட்டுகளை திருடி விற்றதாக கூறப்படுகிறது.
நல்ல நடத்தையை உறுதிச் செய்ய, அவரது பெற்றோருக்கும் ஐயாயிரம் டாலர் உத்தரவாதத் தொகையாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில், பாலிடெக்னிக் படிப்பை முடித்த அந்த தாதியால், ஏழாயிரம் டாலர் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால், டிப்ளோமாவை பெற முடியவில்லை.
எனினும், 2022-ஆம் ஆண்டு, நண்பர்களிடம் கடன் பெற்று அவர் தனது டிப்ளோமா சான்றிதழை பெற்றுள்ளார்.
அந்த கடனை திரும்ப செலுத்த அவர் திருடியதாக கூறப்படுகிறது.