Latestமலேசியா

சிரம்பானில் சைக்கிளில் விளையாடிய 5 வயது சிறுமி கார் மோதி மரணம்

சிரம்பான், ஜூலை 1 – சிரம்பான், பண்டார் ஸ்ரீ சென்டாயானில் உள்ள வீடமைப்பு பகுதியில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த பரிதாபமான சம்பவம் நேற்றிரவு எழு மணியளவில் நிகழ்ந்தது. 34 வயது ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Perodua Ativa கார் அந்த சிறுமியின் சைக்கிளை மோதியதை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Hatta Che Din உறுதிப்படுத்தினார்.

கடுமையாக காயம் அடைந்த அந்த சிறுமி Tuanku Jaffar மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் நேற்றிரவு 8 மணியளவில் மரணம் அடைந்ததாக முகமட் ஹட்டா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!