
கோலாலம்பூர், மே 29 – Shaibha Vision தயாரிப்பில் உருவான “Balas Balik” மலாய் படம் இன்று திரையரங்குகளில் திரையீடு காண்கிறது.
கொடுமைப்படுத்தும் நீடித்த பிரச்சினை மற்றும் அதன் நீண்டகால விளைவுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு குற்ற விசாரணை thriller படம் இதுவாகும்.
மர்மமான மரணத்திற்குப் பின்னால் உள்ள மறைக்கப்பட்ட ரகசியங்களை ஆராயும் திரைக்கதையை கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Feroz Kader இயக்கிய மூன்றாவது திரைப்படமான “Balas Balik” கிற்கான திரைக் கதையை விருது பெற்ற எழுத்தாளர் Siti Jasmina Ibrahim எழுதியுள்ளார்.
துப்பறியும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக Datin Sri Shaila Nair தெரிவித்தார்.
துப்பறியும் அதிகாரியான Zul (Shukri Yahaya) ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் மர்மமான மரணத்தை விசாரிக்கிறார்.
அந்த அதிகாரி தொடக்கத்தில் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது.
அவரது விசாரணையில், இருண்ட ரகசியங்களும் மறைந்திருக்கும் பழிவாங்கும் அம்சமும் இருப்பதை அறிந்து, அந்த கொலைக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை “Balas Balik “திரைக்கதை சித்தரிக்கிறது.
கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பகாங் முழுவதும் பல்வேறு இடங்களில் 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு மாத காலம் படப்பிடிப்புக்குப் பின் இப்படம் இன்று திரையிடப்படுகிறது.
“Balas Balik” ஒரு வலுவான கதைக்களத்தையும் ஆழமான அர்த்தத்தையும் கொண்டுள்ளது என Datin Sri Shaila Nair தெரிவித்தார்.