புத்ராஜெயா, ஏப்ரல் 1 – கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ்நிலை அரசாங்க பணியாளர்களுக்கு, 500 ரிங்கிட் சிறப்பு ஹரி ராயா நிதியுதவியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
ஒப்பந்த பணியாளர்களும் அந்த சிறப்பு நிதியுதவியை பெறுவார்கள்.
அதே சமயம், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு 250 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை, கருவூலம் அந்த உதவிநிதியை வழங்குமென, இன்று காலை பிரதமர் துறை பணியாளர்களுடனான மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் தெரிவித்தார்.