Latestமலேசியா

சிலாங்கூர் பூச்சோங்கில் எரியூட்டப்பட்ட நிலையில் ஆடவர் சடலம் மீட்பு

கோலாலம்பூர், நவ 26 – சிலாங்கூர் , பூச்சோங்கில் டி’ஐலான்ட் பழைய ஈயக் குட்டை பகுதிக்கு அருகேயுள்ள புதரில் கைகள் கட்டப்பட்டு உடலின் பாதி தீயூட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

உள்நாட்டை சேர்ந்த அந்த ஆடவரின் உடலைக் கண்டு பொதுமக்கள் தகவல் கொடுத்தாக செபாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் கமாரூல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேவையற்ற ஆருடங்கள் வெளியிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் . அதோடு இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவுவதற்கு போலீசாருடன் தொடர்புகொள்ளும்படியும் வான் கமாரூல் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!