கோலாலம்பூர், டிச 20 – அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை இந்தியா தனது வெங்காய உற்பத்திக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டதால் கிள்ளான் பள்ளாத்தாக்கிலுள்ள உணவு வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கிலோவுக்கு 1 ரிங்கிட் 50 சென் விற்பனை செய்யப்பட்ட சீன வெங்காயம் இம்மாதம் ஒரு கிலோவுக்கு 3 ரிங்கிட் 90 சென்னாக அதிகரித்துள்ளது என கோலாலம்பூர் மேடான் செலராவைச் சேர்ந்த வர்த்தகரான இந்தான் முகமது தெரிவித்தார்.
மாதந்தோறும் சராசரி 400 கிலோ வெங்காயத்தை வாங்கி வருவதாகவும் வெங்காய விலை ஏற்றம் வர்த்தகர்களுக்கு சுமையை ஏற்படுதியுள்ளதால் அதன் விலையை விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்னர் சீன வெங்காயம் மலிவாக இருந்தது. இப்போது இந்தியா வெங்காயம் இல்லாத காரணத்தினால் சீன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இந்தான் முகமது தெரிவித்தார். மேலும், சீன வெங்காயம் விரைவில் கெடக்கூடியதாக இருப்பதால் அதன் விலையை குறைக்க வேண்டும் என பல வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியா வெங்காயத்திற்கு தடை விதித்துள்ளதால் சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் முகமட் சாபு கூறியிருந்தார்.