![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-09-at-12.36.01-PM.jpeg)
கோலாலம்பூர், பிப் 9 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கத்தின் சீரமைப்பு மெத்தனமாக இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பெர்சே தெரு பேரணியை நடத்த வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹசான் கரிம் கேட்டுக் கொண்டுள்ளார். ஒற்றுமை அரசாங்கம் குறித்து மக்கள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதால் தெரு பேரணியில் ஈடுபடுவது அவர்களை பொறுத்ததாகும் என அவர் தெரிவித்தார்.
வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப சீரமைப்புகளை அமல்படுத்த அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமல்படுத்துவதற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பேரணியின் மூலம் பெர்சே வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்றாகவே இருக்க முடியும் என அவர் கூறினார். அமைப்பு மற்றும் அரசியல் சீரமைப்பை அமல்படுத்தும் கடப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றால் தெரு பேரணியில் ஈடுபடுவதில் தயங்கப்போவதில்லையென கடந்த புதன்கிழமையன்று பெர்சே எச்சரித்திருந்தது.