Latestமலேசியா

சுங்கை சிப்புட்டில் இறந்து கிடந்த பூர்வக்குடி சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்; போலீஸ் சந்தேகம்

சுங்கை சிப்புட், ஆகஸ்ட் -19, பேராக், சுங்கை சிப்புட்டில் காணாமல் போன 10 வயது பூர்வக்குடி (Orang Asli) சிறுமி சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த நான்காமாண்டு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.

இதையடுத்து, தொடக்கத்தில் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்ட அச்சம்பவம் தற்போது கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில், சிறுமியின் கழுத்தில் நெரிக்கப்பட்ட காயமும், மர்ம உறுப்பு கிழிந்தும் இருந்தது கண்டறியப்பட்டதால் போலீஸ் அம்முடிவுக்கு வந்துள்ளது.

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், சிறுமியின் ரத்த உறவான 17 வயது பையனை விசாரணைக்காகக் கைதுச் செய்ததாக, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் மொஹமட் கைசாம் அஹ்மட் ஷஹாபுடின் (Mohd Khaizam Ahmad Shahabudin) தெரிவித்தார்.

கம்போங் பெர்சா பூர்வக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமைக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நூராய்னா ஹுமாய்ரா ரோஸ்லி (Nuraina Humaira Rosli), சனிக்கிழமை மாலை அங்குள்ள சதுப்பு நிலமொன்றில் இறந்து கிடந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!