சுங்கை பெட்டாணி, பிப்ரவரி 26 – கெடா, சுங்கை பெட்டாணி, தாமான் கெலாடிலுள்ள, இரு வாகனம் பழுது பார்க்கும் பட்டறைகளில் ஏற்பட்ட தீயில், ஐந்து கார்களும், 11 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.
இன்று அதிகாலை மணி 5.23 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
11 தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியுடன் அதிகாலை மணி 5.45 வாக்கில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீக்கான காரணமும்,மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகின்றது.