Latestமலேசியா

சுபாங் ஜெயாவில், குப்பை கொட்டும் இடத்திலிருந்து 2 சாமுராய் வாள்களை எடுத்து காரில் வைத்திருந்த ஆடவன் கைது

சுபாங் ஜெயா, மார்ச் 12 – குப்பை கொட்டும் இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட இரு சாமுராய் வாள்களை தனது காரில் வைத்திருந்த ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

அவனதுக்கு எதிராக ஏற்கனவே இரு பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சிலாங்கூர், சுபாங் ஜெயாவிலுள்ள, தாமான் பூச்சோங் பெர்மாயில், அதிகாலை மணி மூன்று வாக்கில், ஹோண்டா ஹேக்கோட் ரக கார் ஒன்றில் பயணித்த அந்த 30 வயது ஆடவனை போலீசார் கைதுச் செய்தனர்.

அக்காரை சோதனை இட்டதில், அதன் பின்புற பயணிகள் இருக்கையிலும், “பூட்டிலும்” வைக்கப்பட்டிருந்த இரு சாமுராய் வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் அஜ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

பூச்சோங் ஜெயா குப்பை கொட்டும் இடத்திலுருந்து அந்த வாள்களை அவ்வாடவன் சேகரித்து வைத்திருந்ததாக கூறியுள்ளான்.

அவ்வாடவனுக்கு எதிராக, 1958-ஆம் ஆண்டு அரிக்கும் பொருட்கள் அல்லது வெடிக்கும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!