Latestமலேசியா

செப்பாங்கில், முதியவரை கடுமையாக தாக்கி காயம் விளைவித்த குற்றச்சாட்டு; விரைவில் திருமணம் புரிந்து கொள்ளவிருக்கும் ஆடவன் மறுத்து விசாரணை கோரினான்

செப்பாங், பிப்ரவரி 9 – அடுத்த வாரம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆடவன் ஒருவனுக்கு எதிராக, முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கி காயங்களை விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், 26 வயது முஹமட் ஜாக்காரியா முஹமட் ரசாலி எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளான்.

ஜனவரி 30-ஆம் தேதி, காலை மணி ஒன்பதுக்கும் 9.20-க்கும் இடைப்பட்ட நேரத்தில், தாமான் புத்ரா பிரிமாவில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஏழாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில், அவ்வாடவனை இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!