Latestமலேசியா

செலாயாங் மருத்துவமனையின் 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்த மனநோயாளி ; காப்பாற்றப்பட்டார்

செலாயாங், மார்ச் 15 – மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

அச்சம்பவம் கடந்த புதன்கிழமை, மாலை மணி 7.45 வாக்கில் நிகழ்ந்ததை, செலாயாங் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் உம்மி கல்தோம் உறுதிப்படுத்தினார்.

32 வயதுடைய அந்த நோயாளி, மருந்துகளை அதிகமாக உட்கொண்டதை தொடர்ந்து, 9D வாட்டில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் மோசமான மனநல பாதிப்புகளுக்கு இலக்காகி இருந்ததாகவும், அதனால் அவர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் உமி கல்தோம் சொன்னார்.

எனினும், திடீரென ஆக்ரோஷமாக நடந்து கொண்ட அவர், மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

சற்றும் எதிர்பாரா வகையில், விரைந்து நிகழ்ந்ததால், அச்சம்பவத்தை நேரில் கண்டவர்களால் அதனை தடுத்து நிறுத்த முடியாமல் போனதாகவும் உமி கல்தோம் சொன்னார்.

கட்டிலின் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்ட அந்நோயாளி, ஒன்பதாவது மாடி ஜன்னலில் வழியாக குதித்து நான்காவது மாடியில் விழுந்தார்.

உடனடியாக மீட்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வேளை ; தற்சமயம் அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அச்சம்பவத்தை சுகாதார அமைச்சு கடுமையாக கருதும் வேளை ; அதற்காக வருத்தத்தையும் வெளியிட்டுள்ளதாக உமி கல்தோம் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!