இந்தியா, டிச 23 – செல்பி எடுப்பதற்காக ரயில் தண்டவாளம் அருகில் இளம்பெண் ஒருவர் போஸ் கொடுத்த போது அவரை ரயில் மோதும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விபத்தானது பெண் ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரயில் தண்டவாளத்தின் அருகில் நிற்கும் போது ஏற்பட்டுள்ளது.
அதில் விபத்தில் சிக்கிய பெண் துருக்கியின் “Belemedik Nature” பூங்கா பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் நிற்கும் காட்சிகளும், அவர்கள் புகைப்படம் எடுக்கும் போது பெயர் வெளியிடப்படாத அந்த பெண் தன் கைகளை தூக்கி போஸ் கொடுத்த போது திடீரென ரயில் மோதும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அப்பெண் அலறி கொண்டு கையை பின்னால் எடுக்கவும், அவரது நண்பர்கள் திரும்பி அவரை பார்ப்பதாக அந்த வீடியோ நிறைவடைகிறது.
அச்சம்பத்தைத் தொடந்து, உடனடியாக அப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.