Latestமலேசியா

ஜெய்ன் ரய்யான் கொலை தொடர்பில் மேலும் இரு சாட்சிகள் போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர். டிச 14 – 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலை தொர்பில் விசாரணைக்கு உதவக்கூடிய மேலும் இரு சாட்சிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

டமான்சாரா டமாய்யில் , இடாமான் அடுக்குமாடி ப்ளாக் R, குடியிருப்பு பகுதியில் குடியிருந்தவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு சிறுவர்கள் சாட்சிகளாக அடையாளம் காணப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த இரண்டு சிறுவர்களும் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

இதுவரை 86 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தேவைப்பட்டால் மேலும் பலரிடம் தகவல் திரட்டப்படும் என ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார். அதே வேளையில் 228 பேரிடம் மரபணு பரிசோதனை மாதிரிகள் திரட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் 18 ப்ளாக்குகளில் குடியிருக்கும் அனைத்து குடியிருப்பு வாசிகளிடம் மரபணு மாதிரி பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். அதோடு 18 ப்ளாக்குகளில் உள்ள அனைத்து 2,484 வீடுகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!