Latest

ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை; 44 கள்ளக்குடியேறிகள் சிக்கினர்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 22 – ஜோகூர் பாரு, தாமான் டாயாவில் மாநிலக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, கைதாவதில் இருந்து தப்பிக்க கள்ளக்குடியேறிகள் தலைத்தெறிக்க ஓடினர்.

பலர் வீட்டின் கூரைகளில் ஒளிந்துக் கொண்டனர்.

எனினும் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 44 பேர் வசமாக சிக்கிக் கொண்டதாக
ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இயக்குனர் Baharuddin Tahir கூறினார்.

அப்பகுதியில் ஏராளமான கள்ளக்குடியேறிகள் தங்கியிருப்பதாக பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில், சுமார் 13 இடங்களில் அந்த Ops Sapu சோதனை நடத்தப்பட்டது.

மொத்தமாக 93 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், எந்தவொரு முறையான பயணப் பத்திரமும் வைத்திராத 44 பேர் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைதானதாக Baharuddin சொன்னார்.

11 மாதக் குழந்தை முதல் 53 வயது வரையிலான அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக Setia Tropika குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!