ஜொகூர் பாரு, பிப்ரவரி 24 – ஜொகூர் பாரு, தாமான் டாயாவில் வாகனமோட்டும் உரிமம் வைத்திராத13 வயது பயனை காரோட்ட அனுமதித்த 25 வயது இளைஞன் கைதாகியுள்ளான்.
சமூக ஊடகத்தில் புகைப்படமொன்று வைரலானதை அடுத்து, பிப்ரவரி 18-ஆம் தேதி மாலை நிகழ்ந்த அச்சம்பவம் அம்பலமானதாக தென் ஜொகூர் பாரு மாவட்ட OCPD ரவூப் செலாமாட் கூறினார்.
13 வயது அப்பையன் காரோட்டுவதும், கைதான இளைஞன் காரின் முன்பக்க பயணிகள் இருக்கையில் அமர்ந்திருப்பதும் அப்புகைப்படத்தில் தெரிந்தது.
விளையாட்டுப் பூங்காவில் வைத்து, அச்சிறுவனுக்கு கைதான நபர் காரோட்டக் கற்றுக் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக ரவூப் சொன்னார்.
சிறாருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்ற வகையில் 2001 சிறார் சட்டத்தின் கீழும், வயது குறைந்தப் பையனை வாகனமோட்ட அனுமதித்த வகையில் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழும் அவ்விளைஞன் விசாரிக்கப்படுகிறான்.