Latestமலேசியா

ஜோகூரில், கட்டுமான தளத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிதடி சண்டை ; காணொளி வைரல்

கூலாய், ஜூலை 16 – ஜோகூர், செடெனாக்கிலுள்ள, கட்டுமான தளம் ஒன்றில், இரு குழுக்களாக பிரிந்து அந்நிய நாட்டு ஆடவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் காணொளி ஒன்று நேற்று தொடங்கி வைரலாகியுள்ளது.

அவர்கள், சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் பணிப்புரியும் அந்நிய தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது.

அந்த 28 வினாடி காணொளியில், ஆடவர்கள் சிலர், கட்டைகளை ஆயுதமாக பயன்படுத்திக் சண்டையிட்டுக் கொள்வதை காண முடிகிறது.

அதனால், அந்த காணொளியில் உள்ள ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக, கூலாய் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் டான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார்.

எனினும், அச்சம்பவம் தொடர்பில் இதுவரை போலீஸ் புகார் எதையும் பெறவில்லை என்பதையும் லீ உறுதிப்படுத்தினார்.

கூலாய், செடெனாக்கில் நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!