Latestமலேசியா

14 மாடுகளை மோதித் தள்ளியது இரயில் ; பயணிகள் பதற்றம்

பெரா, நவம்பர் 2 – ERT – கிழக்குகரை இரயிலில் பயணமான, 336 பயணிகள் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.

அந்த இரயில் 14 மாடுகளை மோதித் தள்ளியதே அதற்கு காரணம்.

நேற்று அதிகாலை மணி 3.50 வாக்கில், நெகிரி செம்பிலான், பஹாவ் – திரியாங்கிற்கு இடையே, 84.75 கிலோமீட்டரில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அதனால், சம்பந்தப்பட்ட இரயிலின் இயந்திரம், குழாய் இணைப்பு உட்பட இதர சில பகுதிகளில் கோளாறு ஏற்பட்டதாக, பெரா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜுல்கிப்லி நாசிர் தெரிவித்தார்.

எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதோடு, அச்சம்பவத்தால் தண்டவாளத்திலும் பழுது ஏற்படவில்லை.

எனினும், இரயிலால் மோதப்பட்ட 14 மாடுகளும் மடிந்து கிடக்க காணப்பட்டன.

அதுபோன்ற சம்பவங்கள் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், வளர்ப்பு பிராணிகளை முறையாக பராமரித்து பாதுகாக்கும்படி ஜுல்கிப்லி கால்நடை வளர்ப்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!