Latestமலேசியா

ஜோகூரில் தாசேக் பீரு கங்கார் பூலாயில் சிக்கிக்கொண்ட 3 மலையேறிகள் 8 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு

ஜோகூர் பாரு, டிச 19 – தாசிக் பிரு கங்கர் பூலாயில் சுங்கை மாஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகே சிக்கித்தவித்துக் கொண்டிருந்த மூன்று மலையேறிகள் எட்டு மணிநேரத்திற்குப் பின் மீட்கப்பட்டனர். 27, 28 மற்றும் 35 வயதுடைய அந்த மூன்று ஆடவர்களும் தாங்கள் சென்ற வழியிலிருந்து திசை மாறியதால், அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு தலைமையேற்றிருந்த கமாண்டர் ஃபைரூஸ் ஹெல்மி முகமட் அலி தெரிவித்தார். மாலை மணி 3.54 அளவில் அவர்களிடமிருந்து நாங்கள் அவசர அழைப்பை பெற்றோம்.

மலைப்பகுதியில் அவர்கள் சிக்கிக்கொண்ட இடத்திலிருந்து எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு அதிகாலை மணி 12.30 அளவில் அவர்கள் மீட்கப்பட்டதாக ஃபைரூஸ் ஹெல்மி தெரிவித்தார். காட்டு வளத்துறையின் ஆறு போலீஸ் அதிகாரிகள், ஆறு மலையேறிகள் உட்பட பல்வேறு துறைகளின் 18 அதிகாரிகள் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதாகவும், மூன்று குழுக்களாக தேடிய பின்னர் அந்த மூவரையும் நாங்கள் கண்டுப்பிடித்தோம் என ஃபைரூஸ் ஹெல்மி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!