![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-14-May-2024-05-48-PM-2606.jpg)
ஜோகூர் பாரு, மே 14 – ஜோகூர் பாருவில், அந்நிய நாட்டு பெண்களை வைத்து, விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, “கேங் பாலா” கும்பலின் நடவடிக்கைகளை போலீசார் முறியடித்துள்ளனர்.
ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் இம்மாதம் முதலாம் தேதி வரையில், ஜோகூர் பாரு மற்றும் கூலாய் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக, 13 அந்நிய நாட்டு காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து, அக்கும்பலின் நடவடிக்கைகள் வெளிசத்துக்கு வந்தன.
அந்த அதிரடி சோதனைகள் வாயிலாக மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும், 22 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதை, ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஸ்னர் எம். குமார் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம் அக்கும்பலின் தலைவன், கட்டடட பராமரிப்பாளர், வாகனம் ஓட்டுனர் உட்பட எட்டு சந்தேக நபர்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 24 கடப்பிதழ்கள், 13 கைப்பேசிகள், 41 ஆணுறைகள், நான்கு சாவிகள், நான்கு நுழைவுச் சீட்டுகள் உட்பட எட்டாயிரத்து 730 ரொக்கப் பணமும், வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வீட்டுப் பணிப் பெண்களாகவும், தொழிற்சாலை ஊழியர்களாகவும் வேலை செய்ய மலேசியாவிற்கு தருவிக்கப்பட்ட அப்பெண்கள், பின்னர் விபச்சாரத்தில் ஈடுப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் தற்போது தற்காலில முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடனும் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குமார் சொன்னார்.