Latestமலேசியா

ஜோகூரில் பொழுதுபோக்கு மையங்கள், கால் பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை; 28 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 25 – ஜோகூர் , சிகமாட்டில் 5 பொழுது போக்கு மையங்கள் மற்றும் Refleksologi எனப்படும் கால்கள் பிடித்துவிடும் நிலையங்களில் ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 28 வெளிநாட்டினரும் உள்நாட்டு முதலாளி ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அமலாக்க பிரிவின் அதிகாரிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் ( Mohd Rusdi Mohd Darus ) தெரிவித்தார்.

வெளிநாட்டினர் மலேசியாவில் வேலை செய்வதற்கான பாஸ் எதுவுமின்றி வேலை செய்து வருவதோடு , சட்டப்பூர்வ அனுமதியின்றி அவர்கள் தங்கியிருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்த நடவடிக்கையின்போது உள்நாட்டினர் உட்பட 48 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 12 தாய்லாந்து பெண்கள், 11 வியட்னாம் பெண்கள், ஐந்து இந்தோனேசிய பெண்கள் மற்றும் 48 வயது உள்நாட்டு நபரும் கைது செய்யப்பட்டதாக முகமட ருஸ்டி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!