Latestமலேசியா

ஜோகூரில் பொழுதுபோக்கு மையத்தில் சோதனை; 74 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஜோகூர் பாரு, ஜன 16 – ஜோகூரில் ஸ்துலாங் லாவுட்டிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாலை மணி 2.45 அளவில் ஜோகூர் மாநில போலீஸ் குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தாய்லாந்து, வியட்னாம் மற்றும் லாவோசைச் சேர்நத 74 பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

22 மற்றும் 45 வயதுடைய அந்த பெண்கள் அனைவரும் பெர்மிட் எதுவும் இன்றி பொழுதுபோக்கு மையத்தில் வேலை செய்து வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து அந்த பொழுதுபோக்கு நிலையத்தை நடத்தியதன் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த அதன் நிர்வாகியும் மற்றும் பெண் கேசியரும் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி வெளிநாட்டு பெண்களை வேலைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக அவர்களும் கைது செய்யப்பட்டதாக கமருல் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!