இஸ்கண்டார் புத்ரி, பிப்ரவரி 13 – ஜோகூர் பாருவில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதுவதை தவிர்க்க முற்பட்ட இதர ஏழு வாகனங்கள் விபத்தில் சிக்கின.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை மோதுவதை தவிர்க்க, மஸ்டா கார் ஒன்று திடீரென வலது சாலையிலிருந்து இடது சாலையில் புகுந்தது.
அந்த காரின் பின்னால் பயணித்த கியா ரக கார் அதனால் திடீர் பிரேக் வைத்து நின்றதால், அதனை மோதி இதர ஐந்து மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துக்குள்ளானதாக இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஹ்மாட் அரிப்பின் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுகிழமை, இரவு மணி 9.21 வாக்கில், ஜாலான் இஸ்மாயில் சுல்தானிலிருந்து, ஜோகூர் பாரு நோக்கி செல்லும் வழியில் நிகழ்ந்தது.
அவ்விபத்தில், பலத்த காயங்களுக்கு இலக்கான இரு ஓட்டுனர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வேளை ; இரு கார் ஓட்டுனர்களுக்கும், இதர நான்கு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக, மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலர் விபத்தில் சிக்கும் காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.