ஜோகூர் பாரு, மார்ச் 18 – ஜோகூர் பாலத்தில், சுல்தான் இஸ்கண்டார் சுங்க, குடிநுழைவு, தனிப்படுத்தும் சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற இரு பேருந்துகள், ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அவ்விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்தது.
பயணிகளை ஏற்றி இருந்த பேருந்து ஒன்று, சிங்கப்பூரிலிருந்து வந்த தொழிற்சாலை பேருந்தை மோதி விபத்துக்குள்ளானது.
அவ்விபத்தில் இரு பேருந்துகளும் மிதமாக சேதமடைந்த வேளை ; பயணிகள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
எனினும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
பயணி ஒருவரால் பதிவுச் செய்யப்பட்டது என நம்பப்படும் அவ்விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.