கோலாலம்பூர், பிப்ரவரி 15 – ஆகஸ்ட்டு முதலாம் தேதி தொடங்கி, ஜோகூர் பாரு சென்ட்ரலில் இருந்து, சிங்கப்பூர் உட்லண்ட்ஸுக்கு சென்று வர மலேசியர்களுக்கு, வெறும் ஐந்து ரிங்கிட் மட்டுமே கட்டணமாக விதிக்கப்படும்.
இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்கி அதற்கான பயண டிக்கெட்டுகளை மலேசியர்கள் வாங்கிக் கொள்ளலாம் என KTMB நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக இன்று தெரிவித்துள்ளது.
தற்சமயம், ஜோகூர் பாரு சென்ட்ரலில் இருந்து, சிங்கப்பூர் உட்லண்ட்ஸுக்கு சென்று வரும் இரு வழிப் பயணத்திற்கு பத்து ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
இந்த கட்டண ஒருங்கிணைப்பு வாயிலாக, ஜோகூர் பாரு சென்ட்ரலில் இருந்து, சிங்கப்பூர் உட்லண்ட்ஸுக்கு சென்று வர இரயில் சேவையை நம்பி இருக்கும் சுமார் 40 ஆயிரம் மலேசியர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.