Latestமலேசியா

ஜோகூர் பாருவில், உணவகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட இருவர் கைது

ஜோகூர் பாரு, ஜனவரி 29 – ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் இமாஸிலுள்ள, உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கைகலப்பில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த இருவர், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் கைதுச் செய்யப்பட்டனர்.

அதில், ஸ்கூடாயில் கைது செய்யப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க முதல் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 38 வயதான இரண்டாவது நபர் கோத்தா மாசாயில் கைதானதாக, ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பல்வீர் சிங் மஹிண்டர் சிங் தெரிவித்தார்.

அந்த கைகலப்பில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் நடவடிக்கைகளை போலீஸ் துரிதப்படுத்தியுள்ளது.

அதனால், அச்சம்பவம் தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பல்வீர் சிங் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, இம்மாதம் 26-ஆம் தேதி, இரவு மணி 11.50 வாக்கில், பாராங் கத்திகளை ஏந்திய ஆடவர் கும்பல் ஒன்று, ஸ்கூடாய், தாமான் இப்பியான் இமாஸிலுள்ள, உணவகம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து கைகலப்பில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த சிலரை தாக்கிய 45 வினாடி காணொளி வைரலாது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!