Latestமலேசியா

ஜோகூர் பாருவில் பரபரப்பு; 2 குற்றவாளிகளைச் சுட்டு வீழ்த்திய போலீசார்

ஜோகூர் பாரு, ஜூன்-5 – ஜொகூர் பாரு, தாமான் அபாட்டில் (Taman Abad) நேற்று மாலை போலீசுடன் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் அதனை உறுதிபடுத்தினார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், MPV வாகனத்தில் இருந்த 42 வயது சந்தேக நபரும் அவனது கூட்டாளியும் என குமார் சொன்னார்.

அவர்கள் பயணித்த வெள்ளை நிற Toyota Estima கார் மீது சந்தேகம் கொண்டு, புக்கிட் அமான் மற்றும் ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் முன்னதாகப் பின் தொடர்ந்துச் சென்றது.

போலீஸ் வாகனம் மிக நெருக்கத்தில் பின்னால் வருவதை அறிந்த அவ்விருவரும் முதலில் தப்பியோட முயன்று, பின்னர் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு போலீசும் சுட்டதில் இருவரும் அங்கேயே உயிரிழந்தனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் உட்பட 38 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது; அவனது கூட்டாளியிடம் அடையாள ஆவணம் எதுவும் இல்லாததால், அவனை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகளும் போதைப்பொருள் பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.

Jalan Abad-டில் வாகனமோட்டிகளையும் அப்பகுதி வாழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அத்துப்பாக்கிச் சூட்டின் காணொலிகள் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளன

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!