பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 29 – இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில், நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில், இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
MetMalaysia – வானிலை ஆய்வுத் துறையின், வானிலை முன்னறிப்பு அட்டவணையை மேற்கோள் காட்டி, NADMA – தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம், அந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ X சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த தகவலின் படி, இன்று காலை, கிளந்தான், திரங்கானு, பஹாங், பேராக், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.
மாலையில், புத்ராஜெயாவிலுள்ள, சில பகுதிகளில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பெர்லீஸை தவிர்த்து நாட்டிலுள்ள இதர மாநிலங்களிலும், ஓரிரு இடங்களில் அடை மழை பொழியும்.
இரவில், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பஹாங், சிலாங்கூர், சரவாக் ஆகிய மாநிலங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் அதே நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது.