Latestமலேசியா

டாக்காவில் வலுக்கும் ஆர்ப்பாட்டம் ; மலேசிய மாணவர்களை தாயகம் அழைத்து வருவது குறித்து விஸ்மா புத்ரா ஆராய்கிறது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19 – வங்காளதேசத்தில், அரசாங்க பணிகளுக்கான ஒதுகீட்டு முறைக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து, டாக்காவிலுள்ள மலேசிய மாணவர்களை தாயகம் அழைத்து வருவது குறித்து, விஸ்மா புத்ரா ஆராய்ந்து வருகிறது.

டாக்காவில், மிக அண்மைய நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அங்கிருக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதும், உள்நாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மாணவர்கள்,பாதுகாப்பு கருதி, டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தில் ஒன்று கூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், உதவிகளை பெற டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தை தொடர்புக் கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வங்காளதேசத்தில், அரசாங்க துறை வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து வெடித்துள்ள மாணவர் போராட்டத்தில், இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் டாக்காவில், நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தணிக்க இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறும் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பங்களுக்கு, 30 விழுக்காடு அரசாங்க வேலைகளை ஒதுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்கள் கோரி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!