Latestஉலகம்

டோனல்ட் டிரம்ப் விசாரணை நடைபெற்று வந்த நீதிமன்றத்திற்கு வெளியே தனது உடலுக்கு தீயூட்டிக்கொண்ட ஆடவன் மரணம்

நியூயார்க், ஏப் 21 – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Donald Trump வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே தனது உடலுக்கு தீயூட்டிக்கொண்ட ஆடவன் ஒருவன் காயம் அடைந்தததைத் தொடர்ந்து மரணம் அடைந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். புளோரிடா,
St Augustine னைச் சேர்ந்த Maxwell Azzarello என்ற ஆடவன் தனது உடலுக்கு தீயூட்டிக்கொண்டதாக இதற்கு முன் போலீசார் தெரிவித்திருந்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள பூங்காவில் அந்த நபர் கையேடுகளை ஆகாயத்தை நோக்கி தூக்கி எறிந்த பின் உடலில் ஒரு திரவத்தை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.

அந்த ஆடவன் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் இறந்துவிட்டதாக நியூயார்க் போலீஸ் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இது தொடர்பான மேல் விவரங்கள் எதனையும் அந்த பேச்சாளர் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நடந்தபோதிலும் உணவு வேளைக்குப்பிறகு Trump க்கு எதிரான வழக்கு விசாரண தொடர்ந்தது. Azzarello தனது உடலுக்கு தீயூட்டிக்கொண்ட சம்பவம் குறித்து வினவப்பட்டபோது இது குறித்து கருத்துரைக்க Trump மறுத்துவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!