கோலாலம்பூர் , பிப் 2 – தஞ்சோங் காராங்கில் தற்காலிக தங்கும் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் ஆவணமின்றி இருந்த 48 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர். அந்த இந்தோனேசிய குடியேறிகள் அனைவரும் கோலாசிலாங்கூர் போலீஸ் நிலையத்தின் உதவியோடு கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறையின் ஆள்கடத்தல் எதிர்ப்பு பிரிவின் முதன்மை துணை இயக்குனர் சோஃபியன் சாண்தோங் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 14 பெண்களும் அடங்குவர். அந்த தங்கும் இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஆள்கடத்தலில் சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த இந்தோனேசிய குடியேறிகள் தங்களது தாயகத்திற்கு திரும்புவதற்காக 1,500 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட்வரை கட்டணம் செலுத்தியிருப்பதும் தெரியவருவதாக சோஃபியன் சாண்தோங் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close