Latestஉலகம்

தமில் நாட்டில் கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

சென்னை, ஜூன் 20 – இந்தியாவில் தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து  மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது  34 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று  17பேர் இறந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் பலர்  இறந்ததைத் தொடர்ந்து  மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   

அந்த சாரயத்தை குடித்தவர்களில் பாதிக்கப்பட்ட   70க்கும்  மேற்பட்டோர்  மருத்துவமனைகளில்  சிசிக்சை பெற்று வருவதால்   மரண எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என   கள்ளக்குறிச்சி   மாவட்ட கலெக்டர்   MS  பிரசாந்த் ( Prasanth)  தெரிவித்தார். அந்த மாவட்டத்தில்  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்   சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று கண்டபின் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.  

இதனிடையே  கள்ளச்சாரயம் குடித்து  பலர் உயிரிழந்தது குறித்து தமிழக  முதல்வர் மு.க ஸ்டாலின் தமது அதிர்ச்சி மற்றும் கவலையை தெரிவித்திருக்கிறார்.  இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதோடு   இச்சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்  என  X தளத்தில்  ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!