தமிழ் நாடு, பிப்ரவரி 19 – இந்தியா, தமிழ் நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலப்பது உறுதிச் செய்யப்பட்டதால், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழ்நாடு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குறிப்பாக, புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன்-பி (Rhodamine-B) எனும் செயற்கை நிறமூட்டி பஞ்சு மிட்டாயில் அதிகம் சேர்க்கப்படுவது ஆய்வில் தெரிய வந்ததன் எதிரொளியாக, அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால், கடந்த சனிக்கிழமை தொடங்கி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, திருமண விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ரோடமைன்-பி கலந்து பஞ்சு மிட்டாய்களை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனினும், ரோடமைன்-பி கலக்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய்களுக்கு தடை இல்லை.