Latestமலேசியா

தம்பினில் இரு கார்கள் மோதிய விபத்தில் ஆடவர் மரணம்; ஐவர் காயம்

சிரம்பான், பிப் 14 – தம்பினில் கம்போங் சுங்கை டுவா பள்ளிவாசலுக்கு அருகே ஜாலான் சுங்கை டுவாவில் இரண்டு கார் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்ததோடு ஐவர் காயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 65 வயதுடைய அந்த ஆடவர் இறந்ததாக தம்பின் போலீஸ் தலைவர் அமிருடின் சரிமான் தெரிவித்தார். அந்த ஆடவர் தங்காக்கிலிருந்து மூன்று பயணிகளுடன் ரொம்பினை நோக்கி வந்துகொண்டிருந்தபோது இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியதால் கடுமையாக காயம் அடைந்ததால் இறந்தார். இந்த விபத்தில் ஒருவர் காயமின்றி உயிர் தப்பிய வேளையில் காயத்திற்கு உள்ளானவர்களில் இருவர் குவாலா பிலாவிலுள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவருவதாக அமிருடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!