தாவாவ் , டிச 28 – சபா, தாவாவில் இரண்டு ஆண் முதலைகள் சுட்டுக்கொல்லப்பட்டன. தாவாவ் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அந்த முதலைகளை வனவிலங்குத்துறை குழுவினர் சுட்டுக் கொன்றனர்.
நேற்று அதிகாலை மூன்று மணியளவில் சுங்கை பத்து 5வில் மூன்று மீட்டர் நீளம் உள்ள முதலை காணப்பட்டது. அதே வேளையில் சுங்கை கினபுதன் ஆற்று முகத்துவாரத்தில் மற்றொரு 1.8 மீட்டர் நீளமுள்ள முதலையும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அண்மையில் சுங்கை பத்து 5வில் முதலை ஒன்று காணப்பட்டதாக காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து அந்த முதலையை பிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தாவாவ் வனவிலங்கு பூங்காத்துறையின்அதிகாரி ப்ரைமஸ் கூறினார்.
இரண்டு முதலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவையிரண்டும் அரை மணிநேத்தில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டன. அந்த முதலைகளில் ஒன்று 200 கிலோவையும் மற்றொன்று 17 கிலோவும் கொண்டிருந்ததாக ப்ரைமஸ் கூறினார்.