Latestஉலகம்

தீயை உமிழும் கண்களை கொண்ட மர்ம உருவம் ; காமிராவை வெறித்து பார்க்கும் காணொளி வைரல்

லண்டன், பிப்ரவரி 19 – பிரிட்டன், லண்டனிலுள்ள, வனப்பகுதி ஒன்றில், இரவில் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏதுவாக பொருத்தப்பட்டிருந்த காமராவில், ஒளிரும் கண்களை கொண்ட மர்ம உருவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நடு காட்டில், மான்கள் உட்பட இதர வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏதுவாக அந்த காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

எனினும், தீயை உமிழும் கண்களை கொண்ட விநோதமான உருவம் ஒன்று அந்த காமிராவை வெறித்து பார்க்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

எனினும், அச்சம்பவம் பதிவுச் செய்யப்பட்ட போது, அவ்விடத்தில் மனிதர்கள் யாரும் இல்லை.

அச்சம்பவம் தொடர்பான காணொளி லண்டன் போய்கள் அல்லது Ghosts of London எனும் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வைரலாகியுள்ளதோடு, அது என்ன உருவமாக இருக்கும் என இணையப் பயனர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, எளிதாக உருவத்தை மாற்றிக் கொண்டு, மனித குரலில் பேசும் ஆற்றலை கொண்ட வெண்டிகோவாக (Wendigo) அது இருக்கலாம் என பலர் குறிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!