கோத்தா கினபாலு, பிப் 2 – சபா, ரனாவில் வீடு ஒன்று தீக்கிரையானதில் 60 வயது மாதுவும் 4 வயது சிறுமியும் உயிரிழந்தனர். கம்போங் மாதானிலுள்ள அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் அந்த இருவரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டதாக தீ மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு மணி 10.53 அளவில் அந்த தீவிபத்து குறித்த அவசர அழைப்பை பெற்றவுடன் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் அந்த வீட்டின் அமைப்பு முற்றாக தீயில் அழிந்தது. அதிகாலை மணி 12.30 அளவில் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின் அவ்வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இருவரின் உடல்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.