இஸ்தான்புல் , ஜன 29 – துருக்கியே தலைநகர் இஸ்தான்புலில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தின்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போப்பாண்டாவர் பிரான்சிஸ் மற்றும் துருக்கிய அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.
முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் உள்ளூர் நேரப்படி காலை மணி 11.40 அளவில் சாரியர் மாவட்டத்திலுள்ள சாண்டா மரியா தேவாயத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. ஒருவரை இலக்காகக் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதே தவிர கத்தோலிக்க தேவாயத்திற்கு எதிராக இல்லையென துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.