மலாக்கா , டிச 26 – மலாக்காவில் ஜாலான் க்ருபோங் பெர்மாயில் தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுனர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மோதியதில் 4 ஆம் படிவ மாணவர்கள் இருவர் மரணம் அடைந்தனர். நேற்றிரவு மணி 9.10 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த 16 வயதுடைய எர்வான் இட்ரிஸ் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற புத்ரா நூர்ஸ்யகிரா புத்ராவிராவன் மலாக்கா மருத்துவமனையில் சிகிக்சை பெற்றபோது உயிரிழந்தார் என மலாக்கா தெங்கா துணை கமிஷனர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார். இந்த விபத்தில் பெரோடுவா ஆக்ஸியா, பெரோடுவா மைவி, ஆகிய இரு கார்களும் ஹோண்டா C100-MA மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டதாக அவர் கூறினார்.
25 வயதுடைய பசார் போரோங்கின் தொழிலாளார் ஒருவர் பெரோடுவா ஆக்ஸியா காரை ஓட்டிச் சென்றபோது தூக்கக் கலக்கத்தில் தாமான் க்ருபோங் பெர்மாயிலுள்ள ஒன் க்ருபோங் சாலை எச்சரிக்கை விளக்கிற்கு அருகே இரண்டு மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார் என போலீஸ் மேற்கொண்ட தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார். அந்த கார் பின்னர் ஒரு தம்பதியர் பயணம் செய்த எதிரே வந்த பெரோடுவா மைவி காரில் மேதியதாகவும் அவர கூறினார்.