மணிலா, டிச 4 – தென் பிலிப்பின்ஸில் இன்று மீண்டும் வலுவலான நில நடுக்கம் உலுக்கியது. உள்நாட்டு நேரப்படி இன்று விடியற்காலை 4 மணியளவில் Mindanao தீவில் ரெக்டர் கருவியில் 6.9 அளவில் பதிவான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ரெக்டர் கருவியில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தென் பிலிப்பின்ஸில் சனிக்கிழமை 7.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு குறைந்தது இருவர் மாண்டதோடு மேலும் பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து தென் பிலிப்பின்ஸ் வட்டாரத்தில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.